பெரம்பலூர், ஜன.30 - தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகத்தில் ஞாயிறன்றுநடைபெற்றது. மாநிலத் தலைவர் எஸ்.வேல்மாறன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் அறிக்கை சமர்ப்பித்தார். மாநிலப் பொருளாளர் சி.பெருமாள், மாநில துணைத்தலைவர் என்.பழநிசாமி, மாநிலச் செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பி னர் எம்.சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கரும்பு உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலை யில், 9.5 சதவீதம் பிழி திறனுள்ள ஒரு டன் கரும்புக்கு ஒன்றிய பாஜக அரசு ரூ.5 ஆயிரம் விலை அறிவிக்க வேண்டும். மாநில அரசுகள் எஸ்ஏபி பரிந்துரை விலையை அறிவிப்பதற் கும் லாபத்தில் விவசாயிகளுக்கு பங்குத்தொகை வழங்குவதற்கும் கரும்பு கட்டுப்பாட்டு சட்டத் திருத்தத் தில் திருத்தம் செய்ய வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து மேம்படுத்த மாநில அரசு நிதி ஒதுக்கி பணிகளை துவக்கிட வேண்டும்.
மாநில அரசு அறிவித்துள்ள படி மதுரை நேசனல் கூட்டுறவு சர்க்க ரை ஆலையை திறந்து செயல்படுத்த வேண்டும், கரும்பு வெட்டுக் கூலி உயர்ந்து கொண்டே வருவதால் முத்தரப்பு கூட்டம் நடத்தி, வெட்டுக் கூலியை தீர்மானிக்க வேண்டும். சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும் சர்க்கரையை விற்பனை செய்திட ஒன்றிய அரசு கோட்டா முறையை அமல்படுத்துகிறது.
இதனால் கடந்த முறை உற்பத்தி செய்த சர்க்கரையை விற்பனை செய்ய முடியாமல், அவை குடோன்களில் தேங்கிக் கிடக்கின்றன. உதாரணமாக திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் 70 ஆயிரம் மூட்டை தேங்கிக் கிடக்கிறது. எனவே ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு கோட்டா முறையி லிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.