districts

img

வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்: அவகாசம் கோரி வியாபாரிகள் போராட்டம்

உதகை, செப்.22- உதகை நகராட்சியில் வாடகை செலுத் தாத 78 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாடகை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கக் கோரியும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடு பட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்டின் உள் மற்றும்  வெளிப்புற பகுதிகளில் மொத்தம் 1,587 கடை கள் உள்ளன. கடந்த 1.7.2016 முதல் வாடகை மறு நிர்ணயம் செய்து உயர்த்தப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைகளில் நிலுவை வாடகை செலுத்துவதாக உறுதியளித்தும், வியாபாரிகள் முழுமையாக செலுத்தாமல் இருந்து வந்தனர். தொடர்ந்து 4 ஆண்டுக ளாக நிலுவை வாடகை ரூ.40 கோடி செலுத் தாததால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 757  கடைகளுக்கு சீல் வைத்து அதிரடி நடவ டிக்கை எடுக்கப்பட்டது. சீல் வைத்த கடை  வியாபாரிகளில் ஒரு சிலர் முழு தொகை யையும் ஒரு சிலர் பாதித்தொகையையும் செலுத்தியதை தொடர்ந்து சீல்கள் அகற் றப்பட்டன. இதன்பின் வாடகை செலுத்தா மல் இருந்த கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். அத்துடன் அவர்கள் வாடகை செலுத்த காலக்கெடுவும் வழங்கப்பட்டது. ஆனாலும்,  வியாபாரிகள் வாடகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து நகராட்சி  ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின்பேரில், அதிகாரிகள் வாடகை செலுத்தாத கடைக ளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடு பட்டனர். இதன்படி கடந்த ஒரு வாரத்திற் குள் இறைச்சி, பேன்சி, மளிகை கடைகள் உட் பட 78 கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட் டது. அந்த கடைகள் முன்பு நோட்டீசும் ஒட் டப்பட்டது. சீல் வைக்கப்பட்ட கடைகளின் உரிமைதாரர்கள் வாடகை செலுத்திய பின் னர் சீல் அகற்றப்படும். வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், புதனன்று 24 கடைகளுக்கு சீல்  வைக்க அதிகாரிகள் முயற்சி செய்தனர். இத னால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் தங்க ளது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் வாடகை செலுத்த கால அவகாசம் வழங்கக் கோரி மார்க்கெட் வளாகத்தில் சமைத்து உண் ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து நகராட்சி வருவாய் ஆணையாளர் காந்திராஜ் கூறுகையில், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட சீல் நடவ டிக்கையை தொடர்ந்து ரூ.40 கோடி பாக்கி இருந்த நிலையில் தற்போது வரை ரூ.18 கோடி மட்டுமே வசூலாகி உள்ளது. நகராட்சி நிர்வாகம் சார்பில் மின்கட்ட ணம் மட்டும் ரூ.14 கோடி பாக்கி வைக்கப் பட்டு உள்ளது. மேலும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. எனவே மீதமுள்ள நிலுவையை வசூலித்தால் தான் நகராட்சி நிர்வாக பணிகளை தொய் வின்றி செயல்படுத்த முடியும், என்றார்.

;