பெரம்பலூர், ஜன.5- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகக் கூட்ட அரங்கில் கூட்டுறவுத் துறையின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வியாழனன்று துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கட பிரியா தலைமை வகித்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சி. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், 23,307 மகளிருக்கு ரூ.47.64 கோடி மதிப்பிலான சுயஉத விக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தற்கான ஆணைகள் வழங்கும் வித மாக, 373 மகளிருக்கு ரூ.1.29 கோடி மதிப்பி லான கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற் கான ஆணைகள் வழங்கப்பட்டன. அரியலூர் அரியலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள 18 மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் மற்றும் 258 நபர் களின் பயிர் கடன் மற்றும் 26 நபர்களுக் கான கால்நடை பராமரிப்பு கடன் உள்ளிட்ட 587 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 46 லட்சத்து 12 ஆயிரம் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கி னார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.