பெரம்பலூர், ஜூன் 3 - ஜூன் 3 அன்று அரியலூர் மாவட்டத்தில் திமுக தலை வரும் முன்னாள் முதலமைச் சருமான மு.கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் கொண் டாடப்பட்டது. மாவட்ட திமுக அலுவலகத்திலுள்ள மு.கரு ணாநிதியின் சிலைக்கு அரிய லூர் திமுக மாவட்ட செயலா ளரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமாகிய சா.சி.சிவ சங்கர் மாலை அணிவித்து நிகழ்ச்சியினை துவக்கி வைத் தார். தொடர்ந்து மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் கட்சி நிர்வாகிகள் உள்பட பொது மக்கள் ஏராளமானோர் ஆர்வ முடன் ரத்ததானம் செய்தனர். பின்னர் மாவட்ட திமுக இளைஞர்அணி அமைப்பு சார்பில் அருகிலுள்ள வள்ள லார் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவும் நகர கழகம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே உள்ள பிள்ளை யார் கோயிலில் அன்னதான மும் வழங்கப்பட்டது. அதன்பிறகு அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலுள்ள திமுக தலைவர் கருணாநிதி சிலைக்கு எம்எல்ஏ கு.சின் னப்பா தலைமையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன. மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, ஜெயங்கொண்டம் சட்ட மன்ற உறுப்பினர் க.சொ.கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.