districts

img

தரமற்ற மருந்து விநியோகம் அதிகாரியை முற்றுகையிட்டு சிபிஎம் புகார்

புதுச்சேரி, ஜூன் 8- தரம் குறைந்த மருந்து விநியோகத்தை கண்டித்து புதுச்சேரி மருத்துவ உள்ளிருப்பு அதிகாரியை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி எல்லைப் பிள்ளை சாவடியில் உள்ள ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மற்றும் பெண்கள் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் தரமற்றவையாக உள்ளதாக புகார் எழுந்தது.  புகாரை அடுத்து சிபிஎம்   மாநில செயற்குழு உறுப்பினர்கள் சீனுவாசன், பிரபுராஜ், மாநில குழு உறுப்பினர்கள் சஞ்சய்சேகரன், ராகுல், சிஐடியு நிர்வாகி மணிபாலன் ஆகியோர் ஆர்எம்ஓ  மருத்துவர் ரொசாரியாவை சந்தித்து முறையிட்டனர். அப்போது மருந்தின் தன்மையை ஆய்வு செய்த அதிகாரி உடனடியாக மருந்துகளை தடை செய்ய உத்தரவிட்டார். மேலும் காலாவதியாகும் மருந்துகளை  மூன்று மாதங்களுக்கு முன்பே தடை செய்ய வேண்டும் என்ற சிபிஎம்-ன் புகாரை ஏற்றுக்கொண்டார். இதுபோல இனி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக அதிகாரி  உறுதி அளித்ததை தொடர்ந்து சிபிஎம்  நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.