புதுச்சேரி, நவ. 30- சட்டத்துறை செயலாளரை மாற்றக்கோரி புதுச்சேரி வழக்கறிஞர்கள் புதனன்று (நவ.30) நீதிமன்ற புறக்கணி ப்பில் ஈடுபட்டனர். என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு பதவியேற்று ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சென்னை உயர் நீதி மன்றத்திற்கும், சார்பு நீதி மன்றங்களுக்கும் புதுச்சேரி அரசு தற்போது வழக்கறிஞர்களை நியமித்துள்ளது. வழக்கறிஞர்களுக்கு தேர்வு நடத்தி தேர்வு எழுதி 7 மாதங்க ளாகியும் அதற்குரிய மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படாமல், புதுச்சேரி வழக்கறிஞர்கள் மட்டு மல்லாமல், சென்னை மற்றும் தில்லியில் உள்ள வழக்கறிஞர்களும் புதுச் சேரி அரசின் வழக்கறிஞர்க ளாக தற்போது நியமிக்கப்பட்டுள்ள னர். இந்த நியமனம் என்பது எந்த மாநிலத்திலும் பின்பற்றாத முறை யில் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டி வழக்கறிஞர்கள் ஒட்டுமொத்தமாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்றத் துக்கு அரசு தரப்பில் புதுச்சேரியைச் சேராத வழக்க றிஞர்கள் நியமிக்க காரணமாக இருந்த புதுச்சேரி சட்டத்துறைச் செயலாளரை உடனடியாக மாற்ற வேண்டும். இதற்கு காரண மாக இருந்த அதிகாரிகள் மீது அரசு துறை ரீதியில் நடவடிக்கை எடுத்து பணிமாற்றம் செய்ய வேண்டும் என்று, வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.