புதுச்சேரி, டிச.13- பிரீபெய்டு மின் மீட்டரால் மூன்று விதமான கட்டணத்தை நிர்ண யிக்கும் அபாயம் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் எச்ச ரிக்கை விடுத்தார்.
புதுச்சேரி மின்நுகர்வோர் களுக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் பிரீபெய்டு மின்மீட்டர் கொண்டு வரும் அரசின் திட்டத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் புதன்கிழமை (டிச-13) சட் டப் பேரவை நோக்கி பேரணி நடை பெற்றது.
பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலையிலிருந்து துவங்கிய பேர ணிக்கு புதுச்சேரி மாநில செயலா ளர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பேரணியை துவக்கிவைத்து பேசினார்.
அவர் பேசியதாவது:
மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு, அரசின் சொத்துக் களை தனியாருக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் விற்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அத்தியாவசிய பட்டியலில் உள்ள மின்சாரத்தை தனியார் முதலாளி களுக்கு விற்க முடிவு செய்து, புதுச் சேரி மின்துறைக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறு மான சொத்துக்களை தனியா ருக்கு விற்க முடிவு செய்து, அதன் ஒருபகுதியாக மின் மீட்டரை பிரீ பெய்டு மீட்டராக மாற்றும் வேலை யை துவக்கி உள்ளது. பாஜக ஆளு கின்ற உத்தரப்பிரதேசம் மாநில மக்களால் புறக்கணிக்கப்பட்ட பிரீ பெய்டு திட்டத்தை புதுச்சேரியில் திணிக்கும் வேலையை பாஜக அரசு துவக்கியுள்ளது.
மின்சார கட்டணத்தை மூன்று பிரிவுகளாக மாற்றி, ஒரு நாளைக்கு மூன்று விதமான கட்டணம் நிர்ண யம் செய்து கொள்ளை அடிக்கும் அபாய திட்டம் இது. இத்திட்டத்தால் ஏழை மக்களுக்கும், விவசாயி களுக்கும் இலவச மின்சாரம் எட்டாக் கனியாகும். சாதாரண மக்கள் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கும் அபாயம் உள்ளது.
முன்னதாக காமராஜர் சிலை யிலிருந்து புறப்பட்ட பேரணி நேரு வீதியை கடந்து சட்டப்பேரவை எதி ரில் முடிவடைந்தது.
கையெழுத்துப் பிரதிகள் ஒப்படைப்பு
‘நமது மின்சாரம் நமது உரிமை’ என்ற முழக்கத்துடன் மக்களி டம் இருந்து பிரீபெய்டு மின் மீட்ட ருக்கு எதிராக ஒரு மாத காலம் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. மக்களிடம் பெறப்பட்ட லட்சம் கையெழுத்து பிரதிகளை கட்டுக் கட்டாக எடுத்துச் சென்று சட்டப்பேரவையில் உள்ள முதல்வ ரின் தனிச் செயலாளரை சந்தித்து மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி தலைவர்கள் வழங்கினார்கள். இப்போராட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் தா.முருகன், சுதா சுந்தரராமன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வி.பெருமாள், எஸ். ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனுவாசன், கொளஞ்சியப்பன், பிரபுராஜ், கலியமூர்த்தி, சத்யா, இடைக்குழு செயலாளர்கள் மதி வாணன், ராம்ஜி, ராமமூர்த்தி, சர வணன், அன்புமணி உட்பட திரளா னோர் பங்கேற்றனர்.