புதுச்சேரி,பிப்.8- ஆளுநர்களை வைத்து அடிமை ஆட்சி செய்ய பாஜக துடிக்கிறது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடுமையாக சாடினார். கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில் ஆளுநர்களை பயன் படுத்தி கொள்ளை புற ஆட்சி நடத்தி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாடு தழுவிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிப். 8 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்து பேசு கையில், “புதுச்சேரியில் கிரண்பேடி மூலம் தனது அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தினார்கள். இப்போது தமிழ்நாடு, கேரளா போன்ற எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் களை வைத்து ஆட்சி செய்ய பாஜக துடிக்கிறது”என்றார். வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜக வுக்கு ‘இந்தியா’ கூட்டணி ஓர் அணியில் நின்று மோடி தலைமை யிலான பாஜக அரசுக்கு தக்க பாடம் புகட்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த போராட்டத்தில் திமுக புதுச்சேரி மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரு மான இரா. சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன் மைச் செயலாளர் தேவ பொழிலன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பாலசுப்பிர மணியன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
சிபிஎம் மூத்த தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெரு மாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனுவாசன், கொளஞ்சியப்பன், பிரபுராஜ், கலியமூர்த்தி, சத்தியா, இடை கமிட்டி செயலாளர்கள், மாநிலக் குழு உறுப்பினர்கள் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.