புதுச்சேரி, அக். 30- புதுச்சேரியில் ஆம்புலன்ஸ் வண்டியில் ஸ்ட்ரெச்சர் சேதமானதால் தள்ளுவண்டியில் சிறுவனை சிகிச்சைக்கு அழைத்து சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே புகார் தெரி வித்தும் அரசும், அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என பொது மக்கள் குற்றச்சாட்டினர். ஹவுரா வில் இருந்து புதுச்சேரிக்கு சனிக்கிழமைதோறும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சனிக்கிழமை (அக். 29) ஹவுராவில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ரயிலில் கொல்கத்தாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பயணம் செய்தனர். அந்த ரயில் புதுச்சேரி அருகே வந்தபோது, அந்த குடும்பத்தை சேர்ந்த சிறுவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அந்த குடும்பத்தி னர் செய்வதறியாது தவித்தனர். இதற்கிடையே அந்த ரயில் புதுச்சேரி ரயில்நிலையத்தை அடைந்ததும் ரயிலில் இருந்து இறங்கிய அவர்கள், சிறுவனை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் புதுச்சேரி சுகாதார நிலையத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ரயில் நிலையத்துக்கு வந்தது. ஆனால் அந்த ஆம்பு லன்சில் உள்ள ஸ்ட்ரெச்சர் சேத மடைந்திருந்தது. இதனால் அதனை நடைமேடைக்கு இழுத்து செல்ல முடியவில்லை. இதையடுத்து சிறு வனின் குடும்பத்தினர் அங்கிருந்த பார்சல் ஏற்றி செல்லும் தள்ளு வண்டியில் சிறுவனை படுக்கவைத்து தள்ளிக் கொண்டு ரயில் நிலையம் வெளியே இருந்த ஆம்புலன்சுக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் சிறுவனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பொதுவாக ஆம்புலன்சில் முத லுதவி சிகிச்சை, ஸ்ட்ரெச்சர் உள்ளிட்ட வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் புதுச்சேரி சுகாதார நிலையத்திற்குச் சொந்தமான ஆம்புலன்சில் எந்த ஒரு வசதியும் கிடையாது. புதுச்சேரி சுகா தாரத்துறையின் கீழ் 108 ஆம்பு லன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என நான்கு பிராந்தியங்களிலும் 15 வாகனங்கள் இயக்கப்பட்டன. அதில் 2 வண்டிகள் பழுதானதைத் தொடர்ந்து தற்போது 13 வாகனங்கள் மட்டுமே ஓடுகின்றன. 2011ஆம் ஆண்டு வாங்கப்பட்ட வாக னங்கள் தான் தற்போது வரை ஓடிக் கொண்டிருக்கின்றன. 11 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த வாகனங்கள் மோசமான நிலை யில் உள்ளன. அடிக்கடி டயர் பஞ்சர் ஆகும், உடைந்து போன ஸ்டெச்சர், ஆக்சிஜன் வசதி இல்லை, முறையான பராமரிப்பு கிடை யாது என ஆம்புலன்சில் உள்ள குறைபாடுகள் ஏராளம். இதை யெல்லாம் கவனிக்க புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் நேரம் இல்லையா?. பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.