தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்க கோரிக்கை
பொன்னமராவதி, ஜூலை 8 - தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளை பேரவை ராஜேந்திரன் தலைமையில் உடையாம்பட்டியில் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பி. ராமசாமி சிறப்புரையாற்றினார். பொன்னமராவதி தாலுகா மரவாமதுரை வட்டம் உடையாம்பட்டியில் சர்வே எண்.45/2 இல் உள்ள சுமார் 11 ஹெக்டேர் ஆத்து புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த தனி நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிலத்தை பொதுமக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். உடையாம்பட்டி மேல்புறம் ஒன்றிய கவுன்சிலர் நிதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பட்டியலின மக்களின் மயானத்திற்கு செல்லும் பாதையை செப்பனிட்டு விரிவாக்கம் செய்து தர வேண்டும். உடையாம்பட்டியில் அங்கன்வாடி கட்டிடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. தலைவராக உ.அர்ச்சுனன், செயலாளராக சி.பாண்டியன் தேர்வு செய்யப்பட்டனர்.
சிஐடியு ஆர்ப்பாட்டம்
பொன்னமராவதி, ஜூலை 8 - ஒப்பந்தப்படி சுழற்சி முறை போஸ்டிங்கை அமல்படுத்த வேண்டும். தொழிற்சங்க பாகுபாடு காட்டக் கூடாது. நார்ம்ஸ் பற்றாக்குறையை காரணம் காட்டி வேலைப்பளுவை திணிக்கக் கூடாது. மனம் ஒத்த இடமாறு தல் வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஜூலை 12 ஆம் தேதி கும்பகோணத்தில் பெருந்தி ரள் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. அதை விளக்கி பொன்னமராவதியில் அரசு போக்குவரத்து பணி மனை முன்பாக சிஐடியு கிளைச் செயலாளர் எஸ்.பால முருகன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் நிர்வாகிகள் மணிவேல், கண்ணன், ரவிச்சந்திரன், செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாய்க்கால் தூர்வாரப்படுமா?
அம்மாபேட்டை, ஜூலை 8- அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரையுள்ள தஞ்சை - நாகை சாலை ஓரத்தில் உள்ள வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இத னால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படும். மேலும் புத்தூர், அவில்தார்சத்தி ரம், புத்தூர் நடுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிளை வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்களும் தூர்வாரப்படாமல் உள்ளன. உடனே இதை தூர்வாரக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், புதர் மண்டிய வடிகால் வாய்க்காலில் இறங்கி நூதன போராட்டம் நடந்தது. சங்கத்தின் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
சீருடை பணியாளர் தேர்வு வாரிய பணிகள் உதவி மையம்
திருவாரூர், ஜூலை 8 - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 15-க்குள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதா ரர்கள் ஒருமுறைப் பதிவு மற்றும் விண்ணப்பம் சமர்ப்பித்தல் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக உதவி மையம் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலக தரைத்தளத்தில் காலை 9.30 முதல் மாலை 6 மணிவரை செயல்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த உதவி மையத்தில் நேரடி யாகவோ அல்லது 04366-226100 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இன்று கும்பகோணத்தில் தமுஎகச கலை இரவு
கும்பகோணம், ஜூலை 8 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் கும்பகோணம் கிளை சார்பில் சனிக்கிழமை (ஜூலை 9) மாலை 5 மணிக்கு கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் உள்ள மார்னிங் ஸ்டார் பள்ளி எதிரில் மாபெரும் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் பட்டி மன்றம், புதுகை பூபாலன் குழுவினரின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சி, எழுத்தா ளர்களின் உரைவீச்சு, வேலூர் சாரல் கலைக்குழுவின் கிராமிய கலை நிகழ்ச்சி கள் நடைபெறுகின்றன. முன்னதாக மாலை 5 மணிக்கு கும்பகோணம் காந்தி பூங்காவி லிருந்து கலை பேரணி துவங்கி, கலை இரவு நிகழ்ச்சி மேடையை வந்தடைகிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை கொரோனா தடுப்பூசி முகாம்
திருவாரூர், ஜூலை 8 - கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஜூலை 10 அன்று 400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடை பெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இம்முகாமில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களில், இதுவரை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு இரண்டாம் தவணை தடுப்பூசி தகுதியேற்பு நாள் கொண்டவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், முன்களப் பணியா ளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ள வர்களுக்கு முன்னெச்சரிக்கை ஊக்குவிப்பு தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது. பொது மக்களுக்கு எந்தவித சிரமமுமின்றி எளிதில் அணுக கூடிய அளவிலும், மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலே யும், இந்த கொரோனா தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளன.