புதுக்கோட்டை, ஜூன் 29 - புதுக்கோட்டை மாவட்டம் கீரனூ ரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட வேண்டுமென கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வலியுறுத்தி உள்ளார்.
நடந்து முடிந்துள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது கந்தர்வகோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தொ குதிக்கு உட்பட்ட பல்வேறு கேள்வி களை எழுப்பியுள்ளார். அவை பின்வரு மாறு:
கீரனூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க நிதி ஒதுக் கீடு செய்ய வேண்டும். மேலும், தொழிற் பூங்கா அமைத்து தொழிற் கட்ட மைப்பை உருவாக்க வேண்டும்.
மருத்துவ வசதிகள்
கந்தர்வகோட்டையில் தாய்-சேய் நல மருத்துவமனை அமைக்க வேண்டும். குன்றாண்டார்கோவில் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத் தர வேண்டும். கீரனூர், கறம்பக்குடியில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனைகளில் சி.டி.ஸ்கேன், டயாலிசிஸ் சென்டர் உள்ளிட்ட வசதி களுடன் கூடுதல் மருத்துவர் மற்றும் செவிலியர்களை நியமித்திட வேண்டும். புலியூர் ஊராட்சியில் கால்நடை மருத்து வமனை அமைத்துத் தர வேண்டும்.
துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
கந்தர்வகோட்டையில் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவல கம் மற்றும் மகளிர் காவல் நிலையம் அமைத்துத் தர வேண்டும். கந்தர்வ கோட்டை பேருந்து நிலையத்தை சீர மைத்து வணிக வளாகம் அமைத்துத் தர வேண்டும். குளத்தூர் தாலுகா, கீர னூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் அமைத்துத் தர வேண்டும். கீரனூர் உத்தமநாதர் ஆலயத்திற்கு குட முழுக்கு செய்து புதிய தேர் அமைத்துத் தர வேண்டும்.
ரயில் நிறுத்தம்
திருச்சியிலிருந்து காரைக்குடி மற்றும் ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் அனைத்தும் கீரனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்வாய் சீரமைப்பு
தஞ்சாவூரிலிருந்து வெட்டிக்காடு வரை செல்லும் கல்லணைக் கால் வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். குன்றாண்டார் கோவிலில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.
இலவச மனைப்பட்டா
குன்றாண்டார்கோவில் ஒன்றியம் இராவுசாபட்டி, கடியாபட்டி, மின்னாத் தூர், பாப்புடையான்பட்டி, வைத்தூர், வாழமங்கலம், வடுகப்பட்டி, கிள்ளுக்கு ளவாய்ப்பட்டி, கேர் காலனி, கீரனூர் கள்ளுக்கடைத் தெரு உள்ளிட்ட தொகுதி முழுவதும் பல்வேறு பகுதி களில் புறம்போக்குகளில் குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு இலவச குடி மனைப் பட்டா வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை எம்.சின்னதுரை எம்எல்ஏ., சட்டமன்றத்தில் எழுப்பினார். இதற்குப் பதிலளித்த சம்பந் தப்பட்ட அமைச்சர்கள், பரிசீலித்து நடவ டிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.