districts

img

திருவள்ளுவர் சிலைக்கு தமுஎகச மரியாதை

புதுக்கோட்டை, ஜன.16- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மரபுக்கலை கிளை  சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை  புதுக்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.  புதுக்கோட்டை சின் னப்பா பூங்காவில் உள்ள  திருவள்ளுவர் சிலைக்கு  தமிழ்நாடு முற்போக்கு எழுத்  தாளர் கலைஞர்கள் சங்கத் தின் மாவட்ட தலைவர் ராசி. பன்னீர்செல்வன் தலைமை யில், மருத்துவர் எஸ்.ராம தாஸ், பேராசிரியர் விஸ்வ நாதன்,  உலக திருக்குறள் பேரவை செயலர் ராமுக் கண்ணு,  மருத்துவர் கே.எச்.சலீம், திருக்குறள் கழகத்  தலைவர் கே.ராமையா, தமு எகச மாவட்ட துணைச் செய லாளர் சு.பீர்முகமது, மாவட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும் மாண வர்களின் சிலம்பம், களரி போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.