புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போருக்கான சங்கம் முயற்சியில் தமிழ்நாடு அரசின் சார்பாக 13 மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் இ.ஏ.கார்த்திகேயன் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு வீல் சேர் வழங்கினார். அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் சங்க தொகுதி தலைவர் தங்கவேல் வரவேற்று பேசினார். ஒன்றிய துணைத் தலைவர் சீனியார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.