districts

img

தொன்றுதொட்டு மனிதர்களின் வாழ்வியல் முறைகளை தொல்லியல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன அமைச்சர் எஸ்.ரகுபதி கருத்து

புதுக்கோட்டை, ஜூலை 16 - தொன்றுதொட்டு மனிதர்களின் வாழ்வியல் முறைகளை தொல்லியல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன என  மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.  புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் தொல்லியல் கழக மாநாட்டை சனிக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: மானுடப் பரவல் குறித்தும், கடந்த  கால மனித வாழ்க்கை முறையையும் ஆய்வு செய்வதற்காக தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான தொன்மை சான்றுகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. தமிழகத்தில் மிக  அதிக எண்ணிக்கையிலான பெருங் கற்கால சின்னங்களையும், கல்வெட்டுச் சான்றுகளையும் கொண்டிருக்கும் மாவட்டம் புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாவட்டத்தில் குரு விக்கொண்டான்பட்டி குடகு மலையில்,  மிகப் பழமையான கற்கால கல்லா யுதம், திருமயம் கோட்டையில் உருட்டுப் பாறையில் வரையப்பட்டிருக்கும் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களும், பெருமாள் மற்றும் சிவபெருமானுக்கு தனித்தனி  குடைவரைக் கோவில்கள் அமைந்துள் ளன. இரும்புக்காலத்தின் தொடக்கமாக செங்கீரை இரும்பு மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்திருக்கிறது. செங்கீரை  பகுதிகளில் இரும்பு உருக்கும் தொழிற் சாலைகள் இருந்திருக்கின்றன. குடு மியான்மலை, சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் மிகப் பழமையான சமணர் படுக்கைகளும், அதன் அருகிலேயே 2  ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  தமிழி கல்வெட்டுகளும் காணப்படுவது  பழந்தமிழ் மொழி அறிவை வெளிப்படுத் தும் முதன்மைச் சான்றாகும். தமிழகத்தில் மிக முக்கியமான இசைக் கல்வெட்டு இருக்குமிடமாக குடுமியான்மலை உள்ளது. அதற்கு முன்னோடியாக மலையக்கோவில், குடுமியான்மலை ஆகிய இடங்களில் தலா ஒரு கல்வெட்டிலும், திருமயத்தில் இரண்டு கல்வெட்டுகளிலும் பரி வாதினி என்ற வீணையின் பெயர், குடை வரைகளின் முன் பகுதியில் எழுதி இருப்பது தனிச் சிறப்பாகும். மிகப் பழமையான நெடுங்கற்கள் ராங்கியம் அருகேயுள்ள கண்ணனூரி லும், பூலாங்குறிச்சி மலை அடிவாரத் தில் உள்ள மலையடிப்பட்டி கிராமத்தி லும் காணப்படுகின்றன. தற்போது  கண்டுபிடிக்கப்பட்டு வரும் கல் வட்டங் களையும் கல் படுக்கைகளையும் உள்ளூர் மக்கள் வழிபட்டு வருகின்ற னர். கோயில்கள் உருவாவதற்கு முன்ன தாக கொம்படி ஆலயங்களும், கல்  வைத்து வழிபடும் பழக்கமும் தமி ழகத்தில் பரவலாக இருந்துள்ளது.  பழங்கால மனித வாழ்வின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வதற்கு தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. தமிழக முதல்வர் இந்த ஆய்வுகளுக்கு முழு ஆதரவு தந்து தமிழர்களின் பாரம்பரியத்தையும் பண் பாட்டையும் உலக மக்களுக்கு கொண்டு  சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.  இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக 30 ஆவது ஆவணம் ஆய்விதழையும், மாநாட்டு மலரை யும் அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட,  சட்டப்பேரவை உறுப்பினர் வை.முத்து ராஜா பெற்றுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வாழ்த்திப் பேசினார். தொல்லியல் கழகத்தின் நிறு வனர் எ.சுப்பராயலு, தலைவர் செந்தீ  நடராசன் ஆகியோர் சர்வதேச கருத்த ரங்குகள் குறித்தும், ஆவணம் ஆய்விதழ்  குறித்தும் விளக்கிப் பேசினர்.