districts

img

கூட்டுறவு சங்கத்தில் நகைக் கடன் தங்க நகைகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கூட்டுறவு சங்கத்தில் நகைக் கடன் பெற்ற 158 பேருக்கான ரூ.66.49 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் செவ்வாயன்று பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், கூட்டுறவு சங்கத் தலைவர் அம்பி தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும்  நகைகளை வழங்கினார். கூட்டுறவு சங்க அலுவலர் மீனாட்சி சுந்தரம், திமுக நகர செயலாளர் அழகப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.