புதுக்கோட்டை, ஜூன் 18 - புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணியை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
பொற்பனைக்கோட்டையில் சென்ற ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் வட்ட வடிவ சுட்ட செங்கல் கட்டுமானமானது சுமார் 38 செ.மீ. ஆழத்தில் கண்டறியப் பட்டது. வடமேற்கு பகுதியில் தொடங்கி தென் கிழக்கு பகுதி வரை நீண்டு, மூன்று அடுக் கினைக் கொண்டுள்ளது. இதன் விட்டம் 230 செ.மீ. இதன் தொடர்ச்சியாக, வடகிழக்குப் பகுதியில் 57 செ.மீ. ஆழத்தில் வாய்க்கால் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 255 செ.மீ. ஆகும்.
மேலும் வட்டச்சில்லுகள், கெண்டிமூக்கு கள், கண்ணாடி வளையல்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் விளக்கு, தக்களிகள், காசு, சூதுபவளமணிகள், மெருகேற்றும் கற்கள், எலும்பு முனை கருவிகள், ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி, தோடு என 533 தொல்பொருட்களும், கீறல் குறியீடுகளும், தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பொறிக்கப் பட்ட மட்கல ஓடு ஆகியவை கிடைத்துள்ளன.
முதற்கட்டமாக 22 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 533 தொல்பொருட்க ளும், பல்வேறு வகையான பானை ஓடுகளும், செங்கல் கட்டுமானங்களும் கிடைத்து உள்ளன.
இந்நிலையில், தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளை பல்வேறு மாவட்டங் களில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 2 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா கலந்துகொண்டு, பணிகளை பார்வை யிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சி யர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா கூறுகையில், “பொற் பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணி நடைபெறும் இடத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட வசதிகள் குறித்த கோரிக்கை நிறை வேற்றித் தரப்படும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை வரு வாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, தொல்லியல்துறை உதவி இயக்குநர் தங்க துரை, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலை வர் வள்ளியம்மை தங்கமணி, வட்டாட்சியர் பெரியநாயகி, வேப்பங்குடி ஊராட்சிமன்றத் தலைவர் ராஜாங்கம் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.