புதுக்கோட்டை, ஏப். 20 - தற்போதுள்ள காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடி களை களைந்து அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் அரசாணை வெளி யிட வேண்டும். தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் வாக்கு றுதி அளித்தபடி 70 வயது முடிவுற்ற ஓய்வூ தியர்களுக்கு 10 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஓய்வூ தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை திலகர் திடலில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் மா.வேலாயுதம் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் மு.முத்தையா மற்றும் நிர்வாகிகள் பேசினர்.
அரியலூர்
ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க சார்பில் காந்தி பூங்கா முன்பு வட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் ராமசாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
கும்பகோணம்
கும்பகோணம் காந்தி பார்க் அருகில் நடைபெற்ற அரைநாள் தர்ணா போராட்டத் திற்கு வட்டத் தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் பக்கிரிசாமி விளக்க உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் பழ.அன்புமணி சிறப்புரையாற்றி னார். தர்ணாவை ஆதரித்து தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்க மாநில துணைத் தலைவர் சாந்தாராமன், அரசு ஊழியர் சங்க தலைவர் விஸ்வேஸ்வரன், சத்துணவு ஊழியர் சங்கம் திரிபுரசுந்தரி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற தர்ணாவிற்கு மாவட்டத் தலைவர் சிவராமன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் வெங்க டேசன் சிறப்புரையாற்றினார்.