பொன்னமராவதி, ஜூன் 20 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி ஒன்றி யம் வாழைக்குறிச்சியில் எய்டு இந்தியா, யுரேகா கல்வி ஆராய்ச்சி மைய நிறுவனம், புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார கல்வி அலுவலர் பொன்ன ழகு மற்றும் முத்து மீனாட்சி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பெரிய சாமி தலைமை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மதி யரசன் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார். முகாமில் வாழைக் குறிச்சி, நெய்வேலி, அரச மலை சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று சர்க்கரை அளவு, ரத்த பரிசோதனை, ஈசிஜி பரிசோதனைகளை இலவசமாக செய்து கொண் டனர். மேலும் இதயம், எலும்பு மற்றும் பல் மருத்து வர்கள் பரிசோதித்து ஆலோ சனை வழங்கினர். மருத்துவ மனையின் மேலாளர் பிரேம் குமார் ராஜன் மற்றும் மருத்துவர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள் திருக் கண்ணன் மற்றும் பார்த்திபன் கலந்து கொண்டனர். எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார்.