districts

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு முன்பதிவு மாவட்ட ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை, ஜன.18-  புதுக்கோட்டை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி கள் மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘‘பொதுப்பிரிவில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட அளவில் கபாடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து  போன்ற போட்டிகள் நடத்தப்படும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கபடி, சிலம்பம், தடகளம், கூடைபந்து, இறகுப் பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கை யுந்துப்பந்து மற்றும் மேசைப்பந்து போட்டி களும், மண்டல அளவில் டென்னிஸ், பளு தூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டி களும் நடத்தப்படவுள்ளன. மேலும், மாற்றுத்திற னாளிகள், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் போட்டிகள் நடத்தப் படும்.  இந்நிலையில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் விளை யாட்டும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. எனவே,  இந்த விளையாட்டு போட்டிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் (www.sdat.tn. gov.in) என்ற இணையதளத்தில 23.01.2023 -க்குள் பதிவு செய்ய வேண்டும்.  நேரடியாக போட்டிகளில் பங்குபெற அனு மதி இல்லை. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலு வலரை 7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.