புதுக்கோட்டை, மார்ச் 27- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் கண்ணியான்கொல்லையைச் சேர்ந்தவர் சண்முகராஜா (50). இவர் சவூதி அரேபியாவிலுள்ள ஒரு தனியார் நிறுவ னத்தில் கிரேன் ஆப்ரேட்டராக பணி புரிந்து வருகிறார். இங்கு, அவரது மனைவி அஞ்சலை (44), மகள் அனிதா (12), மகன் இன்பன்ராஜ் (8) ஆகியோர் வசித்து வரு கின்றனர். தற்போது சண்முகராஜா இறந்து விட்டதாக அவருடன் அறையில் இருந்த நண்பர்கள் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அஞ்சலை உள்ளிட்ட அவரது உறவினர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று அளித்தனர். மனுவில், ‘‘சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த சண்முகராஜா சனிக்கிழமை காலை தொலைபேசியில் பேசினார். அதன்பிறகு அன்று இரவு அவர் இறந்துவிட்டதாக அறையில் இருந்த நண் பர்கள் தொலைபேசியில் தெரிவித்தனர். பொருளாதார வசதி இல்லாத குடும்பம். அவரது உடலைப் பார்த்துவிட்டு இங்கேயே குடும்ப முறைப்படி சடங்கு செய்து இறுதிச் சடங்கு மேற்கொள்ள விரும்புகிறோம். எனவே, உடலைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.