districts

img

இடையன்கோட்டை கோயிலில் 11 ஆம் நாள் மண்டகப்படி: பட்டியலின மக்கள் மகிழ்ச்சி

அறந்தாங்கி, ஆக.16 - புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கியை அடுத்த மேல்மங்கலம் வடக்கு கிராமத்தில் 80-க்கும்  மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள்  வசித்து வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள இடையன் கோட்டை காமாட்சி அம்மன் கோயில் ஆடி திருவிழாவில், ஆதிதிராவிட சமூகத் தினருக்கு மண்டகப்படி வழங்குவதில் தொடர்ந்து பிரச்சனை எழுந்தது.

இதனால் மேல்மங்களம் வடக்கு ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் மெய்யப்பன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த னர். 

அதனடிப்படையில், “பத்து நாள் நடைபெறக்கூடிய திருவிழாவை 11  நாட்களாக மாற்றி, அனைத்து மண்டகப் படிதாரர்களுக்கும் என்ன விதி முறையோ, அவை அனைத்தையும் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கி திரு விழா நடைபெற வேண்டும். அதை அறந்தாங்கி தாசில்தார் பார்வையிட வேண்டும்” என நீதிபதிகள் உத்தர விட்டனர்.

உத்தரவின்படி, 11 ஆம் நாள் ஆதிதிராவிட மண்டகப்படியில் சுவாமி  உற்சவ வீதி உலாவும்  கலை நிகழ்ச்சி களும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சி, அறந் தாங்கி தாசில்தார் திருநாவுக்கரசு மற்றும் நாகுடி காவல் துணை ஆய்வாளர் ஆகியோர் மேற்பார்வை யில் நடைபெற்றது. 

பல போராட்டங்களுக்குப் பிறகு ஆதிதிராவிட சமூகத்தினர் மண்டகப் படி செய்வதால்  வாணவேடிக்கையுடன் கும்மியடித்தும் நடனமாடியும் உற்சவ சுவாமியை சுமந்து கொண்டு வீதி உலா நடந்தது. நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கலை நிகழ்ச்சி  நடைபெற்றது.