districts

img

சிபிஎம் புதுக்கோட்டை மாவட்ட 24 ஆவது மாநாடு பேரணி-பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை, டிச.2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட 24 ஆவது மாநாடு டிச.2, 3 தேதிகளில் நடைபெறுகிறது.  

திங்களன்று (டிச.2) மாலை கீரனூர்  ஒன்றியம் ரயில்வே கேட் அருகில் இருந்து  துவங்கிய பேரணியை, மாநிலக் குழு  உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கொடிய சைத்து துவக்கி வைத்தார். பேரணியில் மாநிலக் குழு உறுப்பினரும், கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.  சின்னதுரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் உட்பட சுமார் ஆயிரக்கணக்கா னோர் செங்கொடியோடு கலந்து கொண்ட னர். பின்னர் காந்தி சிலை அருகில், தோ ழர்கள் எஸ்.இராசசேகரன், க.செல்வராஜ், வே.அண்ணாமலை, பி.மருதப்பா, ஜி. முனியய்யா நினைவுத் திடலில் நடைபெற்ற  பொதுக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார்.

 வரவேற்புக்குழு செயலாளர் எஸ்.கலைச் செல்வன் வரவேற்புரையாற்றினார். கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்  ஜி.இராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாநிலக் குழு உறுப்பினர்கள் எம்.சின்ன துரை எம்எல்ஏ, ஐ.வி.நாகராஜன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற னர். கீரனூர் பேரூராட்சி கவுன்சிலர் எம்.மகாலெட்சுமி நன்றியுரையாற்றினார்.

இன்று பிரதிநிதிகள் மாநாடு

டிச.3 (செவ்வாயன்று) பிரதிநிதிகள் மாநாடு தோழர்கள் என்.சங்கரய்யா, சீத்தா ராம் யெச்சூரி நினைவரங்கில் நடைபெறு கிறது. கட்சியின் மூத்த தோழர் ச.தோ.அரு ணோதயன் கொடியேற்றுகிறார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிகிறார். வரவேற்புக் குழு தலைவர் எம்.சின்ன துரை வரவேற்புரை ஆற்றுகிறார். மாநில  செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராம லிங்கம் துவக்க உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து, மக்கள் மனங்களில் வாழும் மகத்தான தலைவர் தோழர் ஆர்.கருப்பையா நூல் வெளியிடப்படுகிறது. 

பின்னர் தொடங்கவுள்ள பிரதிநிதிகள் மாநாட்டில், மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன் அரசியல் ஸ்தாபன அறிக்கை யையும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்  என்.கண்ணம்மாள் நிதிநிலை அறிக்கையை யும் முன்வைக்கின்றனர். மாநிலக் குழு  உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் வாழ்த்துரை யாற்றுகிறார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிறை வுரையாற்றுகிறார். வரவேற்புக் குழு பொரு ளாளர் எஸ்.பெருமாள் நன்றி உரையாற்று கிறார்.