districts

img

வைரிவயலில் மாட்டு, குதிரை வண்டி பந்தயம்

அறந்தாங்கி, ஏப்.28-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வைரிவயல் வீரமுனி ஆண்டவர் கோவில் சந்தனகாப்பு உற்சவத்தை முன் னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடை பெற்றது.  இதில் சென்னை, கோவை, ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம்,தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதியி லிருந்து கொண்டுவரப்பட்ட மாடு கள் மற்றும் குதிரைகள்  கலந்து கொண்டன.  போட்டியில் பெரியமாடு, கரிச்சான்மாடு, கரிச்சான்குதிரை, பூஞ்சிட்டுகுதிரை என நான்கு பிரிவு களாக  பந்தயம் நடைபெற்றது.  பந்தயத்தில் 83 மாடுகள், 87 குதிரைகள் கலந்து கொண்டன. போட்டியில் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றிபெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும், சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு பரிசுத்தொகையு டன், கோப்பைகளும் வழங்கப் பட்டன.