districts

img

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: புதுக்கோட்டையில் ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை, டிச.28-  புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் மேற்கொள் ளப்பட்டு வரும் கொரோனா முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு செவ்வாயன்று நேரில் ஆய்வு செய்தார்.  ஆய்வின்போது, கொரோனா சிகிச்  சைக்குத் தேவையான படுக்கை வசதிகள்,  மருந்துகள், பரிசோதனை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் போதுமான அளவில் இருப்பு  வைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் பயணிகள் அனை வருக்கும் விமான நிலையத்தில் கொரோனா  தொற்று பரிசோதனைகள் மேற்கொள் ளப்பட்டதை உறுதி செய்யவும், பரி சோதனை முடிவுகள் வரும் வரை அவர் களை தொடர்ந்து கண்காணித்திடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு ஆட்சி யர் அறிவுறுத்தினார்.  அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களிலும், வட்டார அரசு மருத்துவமனை களிலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையிலும் கொரோனா தொற்று சிகிச்சை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தேவையான இடங்களில் பரிசோதனை களை மேற்கொள்ளவும், பரிசோதனை முடி வுகளை விரைவில் வெளியிடவும், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி அவர் களுக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்க வும், அவர்களுடன் தொடர்புடைய நபர்  களுக்கும் கொரோனா தொற்று பரி சோதனை மேற்கொண்டு தொடர்ந்து கண்  காணிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் மருத்துவ அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  நிகழ்வில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, இணை இயக்குநர் (ஊரக நலப் பணிகள்) மரு.ராமு, துணை  இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ச. இராம்கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.