districts

img

முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பு

புதுக்கோட்டை, பிப்.5-  புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1987-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்த முன்  னாள் மாணவர்கள் ஞாயிறன்று சந்தித்தனர்.  1972 தொடங்கி, 2022 வரை 50 ஆண்டு களில் இப்பள்ளியில் படித்த சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பெருந்திர ளாகக்கூடி, தங்களது பள்ளிக் கால மல ரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். மாணவர்கள் மட்டுமல்லாது முன்னாள், இந்நாள் ஆசிரியர்களும் 20-க்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டனர். தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது  பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி, ஒன்றிய அரசின் பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற இப்பள்ளியின் முன்னாள் பள்ளி மாணவர் மு.முருகேஷ் ஆகியோர் உரை யாற்றினர்.  திருக்கோகர்ணம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் லதா, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி ஆகியோர் பள்ளிக்கு தேவைப் படும் அடிப்படையான உதவிகளைப் பற்றி  கூறினார். உடனே பள்ளியில் படித்த முன் னாள் மாணவர்கள் தாமாகவே பல்வேறு உதவிகளைச்செய்ய முன்வந்தனர்.