புதுக்கோட்டை, ஜன.23- புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை யின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் ‘‘ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி’’ சாத னைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண் காட்சியினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். சட்ட மன்ற உறுப்பினர் வை.முத்து ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப் பிரியா, மாவட்ட செய்தி மக் கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம், நகர் மன்றத் தலைவர் திலகவதி செந்தில், முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண் ணன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.