districts

img

நெருங்கும் பக்ரீத் பண்டிகை: ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நாமக்கல், ஜூன் 14- பக்ரீத் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், திருச்செங் கோடு ஆட்டுச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையம் கால்நடை சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு பெருந்துறை, பள்ளப்பட்டி, சேலம், ஓமலூர் போன்ற தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளும், வியா பாரிகளும் வருகின்றனர். ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை இந்த சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் போன்ற அண்டை மாவட்டங்களிலிருந்தும், கேரளா, கர்நா டகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் பலரும் கால் நடைகளை வாங்க இச்சந்தைக்கு வருகின்றனர். இந்நிலை யில், பக்ரீத் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில், இந்த வாரம் ஆடுகளின் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. குறும்பை ஆடு, வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகளை விற்பனைக்காக  அருகிலுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் வெள்ளி யன்று கொண்டு வந்தனர். ரூ.2 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலான ஆடுகள் இச்சந்தையில் விற்பனை செய்யப் பட்டன.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சேலம்,  பள்ளப்பட்டி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆடு களை வாங்குவதற்காக வந்திருந்தனர். இச்சந்தையில் இந்த  வாரம் (வெள்ளியன்று) மட்டும் சுமார் ரூ.4 கோடி அள விற்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரி வித்தனர். பக்ரீத் காரணமாக, மாடுகள் மற்றும் கோழி களின் விற்பனை மந்தமாக காணப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.