districts

img

பேருந்து நிலையம் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு; கடையடைப்பு

நாமக்கல், ஜூலை 18- ராசிபுரத்தில் பேருந்து நிலை யத்தை இடமாற்றம் செய்யும் நடவ டிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாழனன்று வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் ராசிபுரம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சேலம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, கோவை, சங்ககிரி உள் ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வரு கின்றன. தற்போது உள்ள பேருந்து நிலையத்தில் போதிய இட வசதி இல்லாத காரணத்தினாலும், நக ரில் போக்குவரத்து நெரிசல் அதிக முள்ள காரணத்தினாலும், பேருந்து  நிலையம் இடமாற்றம் செய்ய  வேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற ராசிபுரம் நகர்மன் றக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக நகரில் பல்வேறு  சங்கத்தினரிடம் கருத்தும் கேட்கப் பட்டது. அதில், தற்போதைய பேருந்து நிலையத்தை நகரப்  பேருந்து நிலையமாக மாற்றிய மைப்பது குறித்தும் ஆலோசிக்கப் பட்டது. இதன்பின் ராசிபுரம் அடுத் துள்ள அணைப்பாளையம் பகுதி யில் பேருந்து நிலையம் அமைக் கும் வகையில், அப்பகுதியில் தனி யாரிடம் 7 ஏக்கர் நிலம் தானமாக பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் 7 கி.மீ. தொலை வில் உள்ள அணைப்பாளையம் பகுதிக்கு பேருந்து நிலையம் மாற் றம் செய்வதற்கு ராசிபுரம் மக்கள் நலக்குழு உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினரும், அமைப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேருந்து நிலை யத்தை 3 கி.மீ. தொலைவிற்குள் இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும், சிலர் சாலை களை விரிவாக்கம் செய்து, புறவழிச்சாலை திட்டத்தை நிறை வேற்றினாலே தற்போதைய பேருந்து நிலையம் போதுமானது, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய  அவசியம் இல்லை என்றும் தெரி வித்துள்ளனர். இந்நிலையில், பேருந்து நிலைய மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பல்வேறு அமைப்பினரும், பேருந்து நிலைய  மீட்புக் கூட்டமைப்பு என்ற பெய ரில் ஆலோசனை கூட்டம் நடத்தி, கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்திட முடிவு செய்த னர். இதனையடுத்து அனைத்து வர்த்தக நிறுவனத்தினரும் கடை யடைப்பு நடத்த ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்களை நேரில் விநி யோகம் செய்திருந்தனர்.

இதனையடுத்து பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பு அறி விப்பின்படி, வியாழனன்று கடை யடைப்புப் போராட்டம் நடைபெற் றது. இதில் பெரும்பாலான கடை கள் அடைக்கப்பட்டிருந்தன. நகரில்  பேருந்து நிலையம், அதனை ஒட்டி யுள்ள பகுதிகளில் அனைத்துக்  கடைகளும் அடைக்கப்பட்டிருந் தன. நகரில் ஒரு சில டீக்கடைகள்,  மருந்து கடைகள் தவிர மளிகை கடைகள், உணவு விடுதிகள், பேக் கரி கடைகள் உள்ளிட்ட பெரும்பா லான கடைகள் அடைக்கப்பட்டிருந் தன. இதனால் நகரில் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.