districts

img

மணல் கடத்திய லாரிகள் சிறைபிடிப்பு

நாமக்கல், டிச. 11- எலச்சிபாளையத்தில் தொடர்ந்து  ஆற்றுமணல் திருட்டில் ஈடுபட்ட  லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எலச்சிபா ளையம், கொத்தம்பாளையத்தில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்காக அப்பகுதியில் உள்ள ஆற்று மணலை  திருடுவதாக கடந்த சில மாதம் முன்பு  வருவாய் ஆய்வாளரிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். ஆனால், மணல் கடத்தப்படுவதை தடுக்காமல் அதிகாரிகள் அலட்சி யம் காட்டி வந்துள்ளனர்.

இந்நிலை யில், வியாழனன்று இரவு ஆற்று மணலை கடத்தி வந்த டிப்பர் லாரிகளை மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமை யில் பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,  மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி  உரிமையாளர்கள் மீதும், கடத்த லுக்கு துணை போனவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

;