நாகப்பட்டினம், ஜன.18- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்குட்பட்ட கீழையூர் ஊராட்சி யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியோர்கள், முதியோர்கள் என அனைத்து தரப்பினருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப் பினர் வி.பி.நாகைமாலி, சிபிஎம் கீழையூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.வெங்கட் ராமன், கீழையூர் ஊராட்சி மன்ற தலை வர் ஆனந்த ஜோதி பால்ராஜ், உப தலை வர் கருணாநிதி, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் பூதனூரில் வாலிபர் சங்கம் சார்பில் மக்கள் ஒற்றுமை யை வலியுறுத்தி கிளைத்தலைவர் காரல் மார்க்ஸ் தலைமையில் விளையாட்டு விழா நடைபெற்றது. சங்க கொடியினை ஒன்றியச் செயலா ளர் எம்.ஐயப்பன் ஏற்றினார். மாவட்டத்தில் அதிகரித்துவரும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் புழக்கத்தை தடுக்கக்கோரி நடைபெற்ற சுடர் ஓட்டத்தை அய்யாஸ் மெட்ரிக் பள்ளி நிர்வாக இயக்குநர் அப்துல் பாரி துவக்கி வைத்தார். சிபிஎம் ஒன்றி யக்குழு உறுப்பினர் எஸ்.ஆசிக் ரஹ்மான் சுடரை பெற்றுக்கொண்டார். சிறுவர்கள், இளைஞர்கள், பெண் களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற வர்களுக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், சேந்தமங்கலம் எம்.எல். பெரியதம்பி, வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் ஏ.அறிவழகன், ஒன்றிய தலைவர் பவுல் சத்தியராஜ் உள்ளிட்டோர் பரிசு களை வழங்கினர். கிளை செயலாளர் ஆர். சுவேதா நன்றி கூறினார்.