districts

img

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு கண்டனம் தொழிற்சங்கம், விவசாயிகள், வி.தொ.ச. மாநிலம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், பிப்.28 - விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை குறைக்காமல் வழங்க வேண்டும். 40 கோடி முறைசாரா தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். சுகாதாரம் கல்வி மற்றும் கிராமப்புற மேம்பாட்டு நிதியை அதிகப்படுத்த வேண்டும். உரம், உணவு, எரிபொருள் மானியத்தை குறைக்கக் கூடாது, சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க வேண்டும்.  தொழிலாளர் விரோத நான்கு சட்டங்க ளையும் திரும்பப் பெற வேண்டும். மின்சார திருத்த மசோதாவை கைவிட  வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய  பாஜக அரசின் மக்கள் விரோத, விவ சாயிகள் விரோத, தொழிலாளர் விரோத  நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் சார்பில்  திங்கள்கிழமை மாநிலம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நாகப்பட்டினம் அவுரிதிடலில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்க சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமணி தலைமை வகித்தார். விவசாய தொழிலா ளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர்  கண்டன உரையாற்றினார். வி.தொ.ச. மாவட்ட செயலாளர் எம்.முருகையன், வி.ச. மாவட்டடச செயலாளர் கோவை. சுப்ரமணியன், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.வேணு, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினகள் ஆர்.முத்தை யன், கே.சித்தார்த்தன், விதொச மாவட்டக்  குழு உறுப்பினர் மீரா ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

திருச்சிராப்பள்ளி
திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  சிஐடியு மாவட்ட தலைவர் ராமர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.சி.பாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தங்கதுரை, சிஐடியு முறைசாரா தொழிலாளர் சங்க  மாவட்ட செயலாளர் செல்வி, விவசாய சங்க சிவகுமார், விவசாய தொழிலாளர்  சங்க செல்வராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மயிலாடுதுறை 
மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு டி.சிம்சன், காபிரியேல், சீனி. மணி ஆகியோர் தலைமை வகித்தனர்.  விவசாயிகள் சங்க மாவட்ட செயலா ளர் எஸ்.துரைராஜ், விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டா லின், சிஐடியூ மாவட்ட செயலாளர் ஆர். ரவீந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர்.

தஞ்சாவூர்
தஞ்சை ரயில் நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் என்.வி.கண்ணன், அகில இந்திய  விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வாசு ஆகியோர் கண்டன  உரையாற்றினர்.  விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர்  பி. செந்தில்குமார், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டப் பொருளாளர் கே. அபிமன்னன், வி.ச தஞ்சாவூர் ஒன்றியச்  செயலாளர் கே.சண்முகம், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் என்.குரு சாமி, மாநகரச் செயலாளர் வடிவேலன்,  சிஐடியு உறுப்பினர்கள், விரைவு போக்குவரத்து கழகம் பரசுராஜ், டாஸ்மாக் ஊழியர் சங்கம் மதியழகன், மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் கோவிந்தராஜ், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமாறன், பொருளாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்
பெரம்பலூர் புதிய பேருந்து நிலை யத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ், கரும்பு விவசாயிகள் சங்க  மாநிலச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன்,  சிஐடியு மாவட்ட பொருளாளர் சிற்றம் பலம் கண்டன உரையாற்றினார். சிஐடியு, ஆட்டோ சங்கம், சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.