districts

இலங்கை கடற்கொள்ளையர்கள் அராஜகம் கோடியக்கரை மீனவர்களின் பொருட்கள் அபகரிப்பு

வேதாரண்யம், பிப்.20- நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் இருந்து சனிக்கிழமை மதியம் 12  மணிக்கு சீனிவாசன் என்பவ ருக்கு சொந்தமான பைபர் பட கில் செல்வம், ரவி, நாகூரான்,  பூவரசன் ஆகிய 4 பேர் மீன்பி டிக்க கடலுக்கு சென்றனர். கோடிக்கரையில் இருந்து 9 நாட்டிக்கல் மைல் தொலை வில் மீன்பிடித்துக் கொண்டி ருந்த போது இரவு 9 மணிக்கு  அங்கு வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் படகில் ஏறி, கத்தியை காட்டி மிரட்டி மீன வர்களிடமிருந்த ஜிபிஎஸ் கருவி, 2 செல்போன்கள், மீன்  மற்றும் பெட்ரோல் டேங்க்கை யும் பறித்துச் சென்றனர். பெட்ரோல் இல்லாததால் மீனவர்கள் கரை திரும்ப முடியவில்லை. அப்போது அங்கு வந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீன வர்களின் உதவியோடு, படகு  உரிமையாளருக்கு தகவல்  தெரிவித்தனர். கோடிக்கரை யில் இருந்து வேறொரு பட கின் மூலம் பெட்ரோல் மற்றும்  உணவு பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு நடுக்கடலில் தவித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் கொடுத்து, அந்த 4 மீனவர்களும் ஞாயி றன்று மதியம் 2 மணிக்கு கரைக்கு வந்து சேர்ந்தனர்.