districts

img

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நாகைமாலி எம்எல்ஏ திறந்து வைத்தார்

நாகப்பட்டினம், அக்.21- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கொடியாலத்தூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி திறந்து வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கொடியாலத்தூர் ஊராட்சி மைலாப் பூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள் முதல் நிலையம் ரூ.28.94 லட்சம் செலவில்  கட்டப்பட்டது. தற்போது குறுவை சாகுபடி யின் அறுவடை காலம் அதிகரித்து வருவ தால், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் திறக்கப்படுகின்றன. கொடியாலத் தூர் ஊராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக் கையான, நேரடி நெல் கொள்முதல் திறந்து வைக்கப்பட்டதையடுத்து விற்பனையும் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, மீன் வளர்ச்சி  கழக தலைவர் என்.கவுதமன், மாவட்ட ஆட்சி யர் மரு.அருண் தம்புராஜ், கீழ்வேளூர் திமுக  ஒன்றியச் செயலாளர் ப.கோவிந்தராஜ் மற்றும்  உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.