districts

img

பாழடைந்து கிடக்கும் மணக்குடி ஊராட்சி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் புனரமைக்கப்படுமா?

நாகப்பட்டினம், நவ.27 - மணக்குடி ஊராட்சியில் துணை சுகாதார  நிலையம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட் டுக்கு வருமா என அப்பகுதி மக்கள் எதிர் பார்த்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் திருக்குவளை தாலுகா மணக் குடி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப  துணை சுகாதார நிலையம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் கிடக்கிறது. கடந்த 10  ஆண்டுகளுக்கு மேலாக இங்கு இயங்கி  வந்த சுகாதார நிலையம் பழுதடைந்துவிட்ட தால், இப்பகுதியில் மருத்துவ சேவை முற்றி லும் பாதிக்கப்பட்டுள்ளது என முன்னாள் ராணுவப் படை வீரரும் விவசாயிகள் சங்க  ஒன்றியக் குழு உறுப்பினருமான ஏ.சொக்க லிங்கம் தெரிவித்துள்ளார். மணக்குடி ஊராட்சியை சுற்றியுள்ள பகுதிகளான வடுகூர், காடந்தேதி, அமரக் கோன்மூலை, அக்கரைமணக்குடி, வெண்ம ணைச்சேரி, ஏகராஜபுரம், ஆலங்குடி, திருவாய்மூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  ஏராளமான மக்கள் இந்த சுகாதார நிலையத் தில் சிகிச்சை பெற்ற வந்துள்ளனர். இங்கு ஒரு செவிலியர் தங்கி இருந்து மருத்துவ சேவை ஆற்றியுள்ளார். கட்டிடம்  பழுதடைந்த பிறகு அந்த செவிலியர் இரு சக்கர வாகனங்களில் வந்து மருத்துவம் பார்த்துவிட்டு சென்றுள்ளார். தற்போது, சிகிச்சைக்காக இப்பகுதி மக்கள் 5 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் தலை ஞாயிறு ஒன்றிய மருத்துவமனைக்கு சென்று  வருகின்றனர். இந்த சுகாதார நிலையத்தின் அருகி லேயே ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி  இருந்துள்ளது. அதை அப்புறப்படுத்தி புதி தாக கட்டுவதற்காக செய்யப்பட்ட கட்டுமான  பணிகளின் போது சிதிலமடைந்த கட்டிடம் மீண்டும் சிதிலமடைந்து மோசமான நிலை யில் காணப்படுகிறது.

பல மக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வந்த இந்த துணை  சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய  செயலாளர் ஏ.ராஜா கூறுகிறார். பழமை வாய்ந்த கிராம மான மணக்குடி ஊராட்சியில் மேல்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, வங்கி கள், வர்த்தக நிறுவ னங்கள், ஆன்மீக தலம், இப்படி அரசு துறை  சார்ந்த மற்றும் சாராத பல நிறுவனங்கள் இருக்கின்றன. மணக்குடி ஊராட்சியில்  மட்டும் சுமார் 1500 குடும்பங்களுக்கு மேல் உள்ளனர். நீண்ட காலமாக  மக்கள் இக்கோரிக்கையை முன்வைத்து பேசியும் போராடியும் வருகின்றனர். தற்போது இக்கோரிக்கையை முன்வைத்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தை  நடத்தப்படும் என அறிவித்துள்ளது.  ஆலங்குடி முதல் மணக்குடி வரை உள்ள  முதன்மை தார்ச்சாலை குண்டும் குழியு மாக உள்ளது. இரவில் இப்பகுதியில் குற்றச்  சம்பவங்கள் நடைபெறுவதாக பொது மக்கள் கூறுகின்றனர். குறிப்பிட்ட பகுதியில்  உள்ள தெருவிளக்குகளை சமூக விரோதி கள் உடைத்து விட்டு குற்றச் சம்பவத்தில் ஈடு படுவதாக தெரிவிக்கின்றனர். இங்கு புதிதாக துணை சுகாதார நிலை யத்தை கட்டி, செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் இப்பகுதியில் வசிக்கும் பல்லாயிரக் கணக்கான மக்கள் சிகிச்சை பெற உதவி யாக இருக்கும். ஊராட்சியை சுற்றிலும் விவ சாய நிலங்கள் இருப்பதால், விவசாயிகள், தொழிலாளர்களின் அவசர தேவைக்கு முத லுதவி அளிக்க உதவியாக இருக்கும்.

பள்ளி  மாணவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி தாய் மார்கள், வயது முதிர்ந்தோர், ஊன முற்றோர் உள்ளிட்டோர் நீண்ட தூரம் சென்று  மருத்துவம் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. பாம்பு கடி, விபத்து, பிரசவம் உள்ளிட்ட மிக முக்கியமான அவசர மருத் துவ சேவைக்கு 20 கி.மீட்டர் தூரம் உள்ள திருத்துறைப்பூண்டி, 30 கி.மீட்டர் தூரத்தில் உள்ள திருவாரூர் அல்லது நாகப்பட்டினம் தலைமை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாய நிலை உள்ளது.  மேல் சிகிச்சை செல்வதற்கு முதற்கட்ட மருத்துவ உதவி என்பது உயிர்காக்கும் முக்கிய சிகிச்சையாகும். எனவே இப்பகுதி யில் உள்ள இந்த துணை சுகாதார நிலையம்  புனரமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தால், மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.