நாகப்பட்டினம், பிப்.24- உலக உழைப்பாளி வர்க்கத்திற்கு செவ்வான விடிவெள்ளியாய் முளைத்த காரல் மார்க்ஸ் வார்த்தளித்த தத்து வத்தை அவதூறாக பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டக் குழு சார்பில் நாகப்பட்டினம் தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.நாகை மாலி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் கள், இடை கமிட்டி செயலாளர்கள் பங்கேற்றனர். நாகை நகரம், நாகை தெற்கு, வடக்கு ஒன்றியக் குழுக்கள், கீழ்வேளூர் வடக்கு, தெற்கு, ஒன்றியக் குழுக்கள், கீழையூர் கிழக்கு, மேற்கு ஒன்றியக் குழுக்கள், திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளாளோனர் கலந்து கொண்டனர்.