நாகப்பட்டினம், ஜூன் 6- நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி யின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்பாளர் வை.செல்வராஜ் ஜூன் 6 வியாழனன்று கீழ்வெண் மணி தியாகிகள் நினைவிடத்தில் ஸ்தூபிக்கு மாலையணிவித்து மரி யாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் வி.மாரிமுத்து, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து, முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் உலக நாதன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். எம். அபுபக்கர், கீழ் வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தையன்,மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.சிவகுமார்.மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ். சுபாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வி.மாரிமுத்து வாழ்த்து
நாகப்பட்டினம் நாடாளு மன்றத் தொகுதியில் இந்தியா கூட்ட ணியின் சார்பில் போட்டியிட்டு வென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் வை.செல்வராஜ்க்கு சிபிஎம் நாகப்பட்டினம் மாவட்டச் செயலா ளர் வி.மாரிமுத்து சால்வை அணி வித்து வாழ்த்து தெரிவித்தார்.