நாகப்பட்டினம் மாவட்டம் நாகை ஒன்றியத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 87 ஆவது அமைப்பு தினம் நாகை வடக்கு ஒன்றியம் சார்பாக சங்கமங்கலம் ஊராட்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் எம்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கொடியினை மாவட்ட குழு உறுப்பினர் கணபதி ஏற்றி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ் சிறப்புரையாற்றினார். விவசாயிகள் சங்க மாவட்ட குழு, ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாதர்கள் பங்கேற்றனர்.