districts

img

மூல வைகையாற்றில் நீர்வரத்து

கடமலைக்குண்டு, ஜூன் 26- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் கடந்த சில நாட்களாக ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்தது. கடந்த வாரம் ஆறு நீரின்றி முழுமையாக வறண்டு போனது.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததன் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆற்றில் லேசான நீர்வரத்து ஏற்பட்டது. இந்த நீர்வரத்து வருசநாடு கிராமத்துடன் நின்று போனது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்தது. அதன் காரணமாக நேற்று காலை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டது. நேற்று மாலை நீர்வரத்து அய்யனார்புரம் கிராமத்தை கடந்து சென்றது. தொடர்ந்து வெள்ளிமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.