தேனி, டிச.6- கண்ணகி கோவில் நீண்டநாள் பிரச்ச னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. கோவிலை இந்து சமய அறநிலையத்துறை யின் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் இத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கோவிலை கொண்டு வருதல் தொடர் பாக இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அறிவிப்பு நோட்டீஸ் வெளி யிட்டுள்ளார். அதில், தமிழக எல்லையில் வண் ணாத்திப்பாறை மலையில் அமைந்துள்ள கண்ணகி திருக்கோயிலை இத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மேற்படி திருக்கோயிலை இத்துறை யின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரு வதற்கு ஆட்சேபணை ஏதும் இருப்பின் தேனி, பழனிசெட்டிபட்டியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணை யர் அலுவலகத்தில் ஒரு வர காலத்திற்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது என நிர்வாகி, கண்ணகி திருக் கோவில், மற்றும் கிராமநிர்வாக அலுவலர் கீழக்கூடலூர் ஆகியோர்களுக்கு தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் -கூட லூர் கிராமநிர்வாக அலுவலகத்தில் அறி விப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள் ளது.