districts

மதுரை-தேனி ரயில் இயக்கம் 10 ஆண்டு காலப் போராட்டத்திற்கு வெற்றி

தேனி, மே 23- மதுரை, திண்டுக்கல்-லோயர் கேம்ப்  அகல ரயில் பாதை திட்ட அமலாக்குக் குழு தலைவர் ஏ.லாசர் திங்களன்று தேனியில் செய்தியாளர்களைச் சந் தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது: மதுரை-தேனி ரயில் இயக்கம் பத்து ஆண்டு காலம் நடத்திய போராட்  டத்திற்கு கிடைத்த வெற்றி. அதே நேரத்தில் எஞ்சியுள்ள போடி வரை யிலான திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மதுரை வரை இயக்கப்  படும் ரயில் சேவையை தேனி மாவட்ட  மக்கள் பயனடையும் வகையில், சென்னை, இராமேஸ்வரம் மற்றும் செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்  டும். போடி - மதுரை அகல இரயில் பாதை திட்டம் துவங்கிய பின்பு தேனி நகர் பகுதியில் மூன்று ரயில்வே கிரா சிங் அமைந்திருப்பதால் நகர் பகுதி  முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவே மேம்பாலம் கட்டுவதற்கு ஆய்வு மட்டுமே செய்தி ருக்கும் நிலையில் நிதி ஒதுக்கீடு செய்து மேம்பாலங்கள் கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும். லோயர்கேம்ப் அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கேரளாவில் இருந்து சென்னைக்கும் செல்லவும், வர்த்தகம்,  அய்யப்ப பக்தர்களுக்கு பெரும் உதவி யாக இருக்கும். இந்த ரயில் பாதைத் திட்டத்தை முன்னிறுத்தி தங்களின் அடுத்த கட்ட போராட்டங்கள் நடை பெறும் எனத் தெரிவித்தார்.