தூத்துக்குடி,ஜூன் 8- கோவில்பட்டியில் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சி வாகன ஊர்தியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர், கப்ப லோட்டியத் தமிழன் வ.உசிதம்பர னார் 150-வது பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் வாழ்க்கை வரலாற்றினை பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் புகைப்படக்கண்காட்சி அமைத்திட வேண்டும் என்ற அறி விப்பிற்கிணங்க செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் குளி ரூட்டப்பட்ட அரசுப் பேருந்தில் அன்னாரது வாழ்க்கை வரலாற்றினை புகைப்படக்கண்காட்சியாக வடி வமைத்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளில் நகரும் புகைப்படக்கண்காட்சி நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி , மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், முன்னிலையில் தொடக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து புதனன்று கோவில்பட்டி வட்டத்திற்குட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி இலாயல்மில் காலனி, இல்லத்தார் நடுநிலை பள்ளி வ.உ.சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஹரிதா பப்ளிக் பள்ளி, ஊ.ஒ. தொடக்கப்பள்ளி, கீதாஜீவன் கல்லூரி, கீழஈரால் தொன்போஸ்கோ கலை அறிவி யல் கல்லூரிமாணவர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள், பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதுகுறித்து, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கூறுகையில், “வ.உ.சி. வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்வதற்கு ஏற்பாடு செய்த தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர். நிகழ்ச்சியில் கீதாஜீவன் கல்லூரி முதல்வர் இளங்குமரன், கீழஈரால் தொன்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஜோசப் சார்லஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.