districts

இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

தூத்துக்குடி, மே 18-
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக விசைப் படகுடன் இலங்கை மீனவர்கள் 7 பேரை தூத்துக்குடி கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான “வைபவ்’  ரோந்து கப்பல் மூலமாக கடலோர காவல் படையினர் ரோந்துப் பணி யில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இலங்கை பதிவு  எண் கொண்ட மீன்பிடி விசைப் படகு இந்திய கடல் எல்லைக்குள் கன்னியாகுமரி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித் துள்ளது தெரியவந்தது. 

இதையடுத்து கடலோர காவல்  படை வீரர்கள் அந்த விசைப் படகை சுற்றி வளைத்தனர். அதில்  இருந்த 7 மீனவர்களை கைது செய்தனர்.

இவர்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 19) காலை 9 மணிக்கு தருவை குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்படு வார்கள் என்று தெரிகிறது.

;