districts

img

தூத்துக்குடி அருகே சுமார் 10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் : போலீஸ் விசாரணை!

தூத்துக்குடி அருகே சுமார் 10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியாபுரம் அருகே உள்ள ஹரி பால கிருஷ்ணா  லாரி செட்டில்  செம்மரகட்டைகள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி ரூரல் ஏ.எஸ்.பி சந்தீஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 20 மெட்ரிக் டன் எடை கொண்ட செம்மர கட்டைகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக லாரி செட் ஓனர்  தூத்துக்குடி போல் பேட்டையை சேர்ந்த ஜெயராஜ் மகன் ராக்கேஷ் (34) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து துறைமுகம் வழியாக வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தாக  கூறப்படுகிறது.