districts

img

இலங்கை சிறையில் வாடும் 22 தூத்துக்குடி மீனவர்கள்! உறவினர்கள் பட்டினிப் போராட்டம்

தூத்துக்குடி, செப். 9- தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சேர்ந்த மகாராஜா மற்றும் தேனிலா ஆகியோரின் இரண்டு விசைப் படகுகளில், கடந்த ஜூலை 20-ஆம் தேதி ஒரு படகிலும், 23-ஆம் தேதி ஒரு படகிலுமாக மொத்தம் 22 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மன்னார் தெற்கு கடற்பரப்பில்  வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர், அவர்களை புத்தளம் மாவட்டம் கல்பிட்டி சுற்றுலா நீதி மன்றத்தில் வாரியாபொல சிறைச்சாலையில் அடைத்தனர்.

இதனிடையே, இந்த 22 பேர் மீதான வழக்கு செப்டம்பர் 3-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, 12  பேருக்கு தலா 1.5 கோடி ரூபாய் (இலங்கை பணமதிப்பில்) அபராதம் செலுத்துமாறும், செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாதம் சிறை தண்டனை என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 22 மீனவர்களையும், 2 விசைப் படகு களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய - மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வலியுறுத்தி, தூத்துக் குடி, தருவைக்குளம் கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தருவை குளம் கிராமத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு 250 விசைப் படகுகள், 350 நாட்டுப்படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டன.