districts

வலங்கைமான் விற்பனைக் கூட பருத்தி ஏலத்தில் முறைகேடு முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு

குடவாசல், ஜூலை 18 - திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி  ஏலம் நடைபெறுவதில் முறைகேடு உள்ள தாக விவசாயிகள் சங்கத்தின் திருவிடை மருதூர் ஒன்றியச் செயலாளர் அன்பழகன் முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அனுப்பி யுள்ளார். அம்மனுவில், “கடந்த ஜூலை 8 ஆம் தேதி  வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் கலந்துகொண்டு தனது பருத்தியை  விற்பனை செய்துள்ளேன். இரவு 8 மணிக்குத் தான் ஏல விலை பட்டியல் சுவரில் ஒட்டப்பட்டது.  அதையும்  ஏலத்திற்கு வந்தவர்கள் கிழித்து  எடுத்து சென்று விட்டனர். நான் விற்பனை செய்த 5 தாட்டு பருத்திக்கு உடனே பில் பில் போடவில்லை. தனது பருத்திக்கு பில் வாங்குவதற்கு மீண்டும் கடந்த ஜூலை 16 ஆம் தேதி வலங் கைமானில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை  கூடத்திற்கு சென்று, பருத்தி எடை போட்ட பில்களை கேட்டேன். அப்போது பில் எண் 149657, 149658 என இரண்டு பில் கொடுத்துள்ள னர். அதில் பருத்தி மூட்டை என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எந்தவித விவ ரமும் இல்லை.  இதுகுறித்து அலுவலரிடம் கேட்ட போது, இது தான் பில். எப்பொழுதும் இப்படி தான் கொடுப்போம் என்றனர். பருத்தி மூட்டை  எத்தனை, பருத்தி எடை எவ்வளவு, விலை விபரம் என்ன உள்ளிட்ட எந்தவொரு விபர மும் இல்லையே எனக் கேட்டதற்கு, அவர்கள்  சரியாக பதில் அளிக்கவில்லை. தனது பருத்திக்கான விலை, அதற்கு உண்டான தொகையினை குறிப்பிட்டு சரியான ரசீது  தரவில்லை. என்னிடம் வாங்கிய பருத்திக்கு  இதுவரையிலும் பணமும் தரவில்லை.  இந்த பருத்தி விற்பனை கூடத்தில் அலட்சி யத்துடன் செயல்படும் அதிகாரிகள், தனியார்  வியாபாரியிடம் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும்  வகையில் முறைகேட்டில் ஈடுபடுவதாக தெரி கிறது. எனவே முறைகேடு செய்யும் அதிகாரி கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  விவசாயிகளை பாதுகாக்க உடனே பருத்திக் கான பணத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.