திருவாரூர், மார்ச் 19 - நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந் துள்ளன. இதனால், சட்டசபை, பொது இடங்க ளில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்கள், அரசி யல் கட்சி பேனர்கள், ரேசன் கடைகள், கூட்டுறவு சங் கங்கள், பெட்ரோல் பங்கு களில் உள்ள அரசியல் தலைவர்களின் படங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட அல்லது மறைக்கப்பட வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான் எல்லை அருகே, மயிலாடுதுறை நாடாளுமன்றத்திற்கும் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்ட தில் லையம்பூர் ஊராட்சி, மாடா குடி சாலையில் வலங்கை மான் மகா மாரியம்மன் கோவில் அருகே பெட் ரோல் பங்க் உள்ளது.
இந்த பெட்ரோல் பங்கில் உள்ள ஒன்றிய அரசின் விளம்பர பதாகை இதுவரை அகற்றப்படாமல், மறைக்கப்படாமல் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்து 72 மணி நேரத்தை கடந்த நிலையில், இந்த விளம்பரப் பதாகை அகற் றப்படாமல் உள்ளது.
இது தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் எல்லைப் பகுதி யாக இருப்பதால், தேர்தல் அலுவலர்களும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள், விளம்பர பதாகையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பார்களா?a