திருவாரூர், நவ.14- திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலை மையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் சார்பாக கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நவம்பர் 28 ஆம் தேதி முதல் திருவாரூர் மாவட்டத்தில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதையொட்டி திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பாக ரயில் மறியல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற் றது. சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளர் எம்.சேகர், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.குமாரராஜா, சிஐ டியு மாவட்ட செயலாளர் டி.முருகையன் உள்ளிட்டோர் பேசினர். சிபிஎம் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர் கள், ஒன்றிய, நகர செயலாளர்கள் பங்கேற் றனர். இதில், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி பேசுகையில், “ரயில்வே துறையில் குறிப்பாக, திருவாரூர் ரயில் நிலையம் பரா மரிப்பு மற்றும் ரயில் நிலையங்கள் மேம் பாட்டு பணிகள், (நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம்) நாகை, திருவாரூர் வழித்தடங் களில் கூடுதலாக ரயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட 32 கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த வாரம் திருவாரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பற் கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர் 28 ஆம் தேதி முதல் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடை பெற உள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் பங்கேற்க வேண்டும்” என்றார். கூட்டத்தில், திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் - பேரளம் இடையே ஒரு மையம். திருவாரூர் - நீடாமங்கலம் இடையே ஒரு மையம் என இரண்டு மையங்களில் 32 கோரிக்கைகளை வலியுறுத்தி, 50 ஆயி ரம் பேர் பங்கேற்புடன் மாபெரும் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட வேண்டும். முதல் மையத்தில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில், கட்சியின் திருத்துறைப்பூண்டி தெற்கு, வடக்கு, நகரம் மற்றும் முத்துப்பேட்டை ஒன்றியம், நகரம், திருவாரூர், ஒன்றியம், நகரம், நன் னிலம் ஒன்றியம், நகரம் மற்றும் குடவாசல் வடக்கு பகுதி (இரவாஞ்சேரி) ஆகிய இடைக்குழு உறுப்பினர்கள் மறியலில் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப் பட்டது. இரண்டாவது மையத்தில் மன்னார்குடி ஒன்றியம், நகரம், கோட்டூர், நீடாமங்கலம், கொரடாச்சேரி, வலங்கைமான் மற்றும் குட வாசல் தெற்கு பகுதிக்குழு, குடவாசல் நக ரம் ஆகிய இடைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும். இந்த மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் மாநில செயற் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமை வகிப்பார்கள் என முடிவு செய் யப்பட்டது.