districts

தினக்கூலி நிர்ணய செயல்முறை ஆணை வெளியிடக் கோரி மனு

திருவாரூர், ஜூன் 18 - தினக் கூலி பணியாளர்களுக்கு தினக்கூலியை நிர்ணயித்து  செயல்முறை ஆணை வெளியிடக் கோரி சிஐடியு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அம்மனுவில், “2021-22 ஆம் ஆண்டுக்கான தினக்கூலி நிர்ண யம் செய்து செயல்முறை ஆணை கடந்த 1.9.2021 அன்று  ந.க.எண். 4903/2021-ன் படி மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட் டது. ஆனால் 2022-23 ஆம் ஆண்டிற்கான செயல்முறை ஆணை  வெளியிடப்படாததால், தினக்கூலி தொழிலாளர்கள் சட்டக்கூலி பெறுவதில் சிரமம் இருக்கிறது. இதில் மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தி செயல்முறை ஆணை வெளி யிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலா ளர் டி.முருகையன் கோரிக்கை வைத்துள்ளார்.