குடவாசல், ஏப்.25 - திருவாரூர் மாவட்டம் குட வாசல் வட்டம் புதுக்குடியில் தமிழ்நாடு மருத்துவ மற்றும் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய திருவிழாவாக ‘கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் - மக்களை தேடி மருத்துவ முகாம்’ நடைபெற்றது. இதில் நாகை நாடாளு மன்ற உறுப்பினர் எம்.செல்வ ராஜ் (சிபிஐ), திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஆகி யோர் தலைமை வகித்து மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். முகாமில் பொது மக்களுக்கு பரிசோதனை செய்து, நோயை கண்ட றிந்து உடனே மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும் பரிசோதனை செய்யப்பட்ட நோயாளிகள் சிலரை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்து வமனைக்கு பரிந்துரை செய்தனர். முகாமில் சித்த மருத்து வம், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையும் அளிக்கப் பட்டது. மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, குடவாசல் திமுக ஒன்றிய செயலாளர் பா.பிர பாகரன், நகர செயலாளர் ஆர்.முருகேசன், பேரூ ராட்சி மன்ற தலைவர் முரு கேசன் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.