districts

img

அதிக கட்டணம் வசூலிக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்திடுக! கருப்புக் கொடி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம், மார்ச்.6- திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலத்தில் அரசு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணத்தை விட மிக அதிகமாக கட்டாயமாக கட்ட ணம் வசூலிக்கும் நீலன் மெட்ரி குலேஷன் பள்ளி மீது நட வடிக்கை எடுக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண் டன மற்றும் கோரிக்கை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் கிஷோர் குமார் தலைமை வகித்தார். அண்ணா சிலையில் இருந்து புறப்பட்ட பேரணியை வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் பி.கந்தசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி நீடா மங்கலம் கடை வீதியின் வழியாக வந்து பெரியார் சிலை எதிரில் முடி வுற்றது.  பின்னர் நடைபெற்ற கூட்டத் திற்கு கிஷோர்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் ஏ. அருண்குமார், ஒன்றிய பொருளா ளர் பாரதி மோகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கே.பி.ஜோதிபாசு, மாவட்ட பொருளாளர் ஏ.கே.வேலவன்,  மாவட்ட துணை செயலாளர் எஸ். இளங்கோவன், மாவட்ட ஒன்றிய துணை இணை நிர்வாகிகள் ஜே.ஜெயராஜ், எஸ்.ராஜா, சி. குமார், ஆர்.சரவணன், எஸ்.சதீஷ் உள்ளிட்டோர் பேசினர். 120 பெண் கள் உட்பட 500 பேர் போராட்டத் ல் பங்கேற்றனர். மாறுதல் சான்றிதழ் வாங்கு வதற்கு கூட பெருந்தொகையை நிர்ப்பந்தம் செய்து வாங்குவது, அரசு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணத்தை விட மிக அதிகமாக கட்டாயமாக கட்டணம் வசூலிப் பது, பள்ளிக்கு அருகாமையில் இருந்த செட்டிக்குட்டை மற்றும் அதன் பாய்கால் வாய்க்காலை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடு பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இப்பள்ளியின் முறையற்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்படும் முதன்மை கல்வி அலுவலரை கண்டித்தும், நீடா மங்கலம் நகரத்திலும் சுற்று கிரா மங்களிலும் உள்ள ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் தனியார் கட்டணக் கொள்ளை இன்றி படிப்பதற்கு வசதியாக நீடா மங்கலத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்திட கோரியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.